வாடாமல்லி
Friday, April 6, 2007
காலங்கள் தந்த ஏமாற்றங்கள்

காதலை தேடினேன்
காத்திருப்பு தந்த வலியினால்
காணாமல் போனது
கற்பனைகள் மட்டுமல்ல
மகிழ்ச்சிகளும் தான்...

அன்புள்ளங்களை தேடினேன்
அத்தனையும் தந்த வலியினால்
அறுபட்டு போனது
ஆனந்தம் மட்டுமல்ல
அரவணைப்புக்களும் தான்

அன்பைத் தேடினேன்
பாச உறவுகள் தந்த வலியினால்
பறந்தே போனது
பந்தங்கள் மட்டுமல்ல
பாசங்களும் தான்

அகிம்சையை தேடினேன்
பொறுமை தந்த வலியினால்
வற்றிப்போனது
பொதுநலம் மட்டுமல்ல
மனத நேயங்களும் தான்

கனவுகளை தேடினேன்
காலம் தந்த வலியினால்
காணாமல் போனது
நிஐங்கள் மட்டுமல்ல
நிழல்களும் தான்

Labels:

posted by நந்தியா @ 9:10 PM
7 Comments:
  • At April 20, 2007 at 6:55 AM, Blogger Unknown said…

    வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.

     
  • At April 26, 2007 at 6:44 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

    நல்லா இருக்கு, என்ன நீண்ட நாளா காணலை உங்க பதிவுகளை

     
  • At April 27, 2007 at 8:26 PM, Blogger நந்தியா said…

    வாடாமல்லிக்கு வாழ்த்துக்கள்.

    ----------
    உங்கள் வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றிகள் நண்பரே..

    நல்லா இருக்கு, என்ன நீண்ட நாளா காணலை உங்க பதிவுகளை...
    ம்ம் வெகுவிரைவில் அடுத்த பதிவு வெளிவரும். வருகைக்கு நன்றிகள் விஐ.

     
  • At April 27, 2007 at 8:39 PM, Blogger மங்கை said…

    ///அன்புள்ளங்களை தேடினேன்
    அத்தனையும் தந்த வலியினால்
    அறுபட்டு போனது
    ஆனந்தம் மட்டுமல்ல
    அரவணைப்புக்களும் தான்///

    ஹ்ம்ம்ம்..ஆமாம்

     
  • At April 29, 2007 at 8:28 PM, Blogger நந்தியா said…

    உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிகள் மங்கை.

     
  • At July 27, 2007 at 4:49 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said…

    i too share the same feelings. nice poem.

     
  • At August 10, 2007 at 5:46 AM, Blogger நந்தியா said…

    பாரதிய நவீன இளவரசன் said...
    i too share the same feelings. nice poem. *****

    thankyou for your wonderful comments.

     
Post a Comment
<< Home
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER